சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு நாடாளுமன்ற சுயாதீன குழு அறிவிப்பு!
சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பு அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சற்று முன் இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பு தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.