மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு செல்லமாட்டார் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் செல்லமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்தே விலகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகமாட்டார் எனத் தெரிவித்துள்ளார் நாமல்.
இன்று காலை அதிபாதுகாப்புடன் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த முகாமுக்கு முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மைன கோ கம மற்றும் கோத்தா கோ கம போராட்டங்களைக் குழப்பி, தாக்குதலை நடாத்தத் திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.