விமான நிலையம் செல்லும் வீதியில் வாகனங்களை சோதனையிடும் மக்கள்!
கட்டுநாயக்க விமான நிலையம் அருகில் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
விமான நிலையத்திற்கு செல்லும் வீதிகளில் குழுமியுள்ள மக்கள், அப்பகுதியூடாக செல்லும் வாகனங்களை சோதனையிடுகின்றனர்.
நாட்டு மக்களின் பணத்தை சூறையாடி, சொகுசு வாழ்க்கை அனுபவித்த அரசியல்வாதிகள் வௌிநாட்டிற்கு தப்பியோடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது