இலங்கையை மீட்பது பாரிய சவால் மத்திய வங்கி ஆளுநர்!
இலங்கை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடன் மூன்று மணிநேர கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது இலங்கையிடம் ஒரு ரூபாவோ, டொலரோ இல்லை என தெரியவந்ததாகவும், இலங்கையை மீட்பது பாரிய சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.