இலங்கைக்கு பங்களாதேஷ் மருந்துகள் நன்கொடை!
பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார். 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 56 வகையான அத்தியாவசிய மருந்துகளே இவ்வாறு இலங்கைக்கு நன்கொடையாக பங்களாதேஷினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.