நாளை முதல் நாடு முழுவதும் ஹர்த்தால்?
நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இலங்கை முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்க உள்ளதாக 300இற்கும் அதிகமான தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை தொடக்கம் எதிர்வரும் 28ம் திகதி வரை நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்