காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆடை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 10 நாட்களாக தொடர்ந்து வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு பாகங்களிலும் இருந்து ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன ஆடையொன்றினை வடிவமைத்துள்ளார்.
குறித்த ஆடை(TSHIRT) Go Home Gota என எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை,காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்