இலங்கையை ஏமாற்றிய சீனா!

இலங்கையின் நண்பன் சீனா என்றாலும், குழப்பமான அரசியல் நெருக்கடியில் தலையிடத் தயங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி கோரிக்கைக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு உதவுவுதாக சீன ஜனாதிபதி ஸி ஜிங்பின் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் பணவீக்கம் அதிகரிப்பிற்கு மத்தியில் உரிய பதில் கிடைப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் தந்திரத்தை சீனா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இருந்த போதிலும், இதுவரையில் அவர்கள் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *