வெளிநாட்டவர்களை நாடு கடத்த 2.1 மில்லியன் தினார்கள் செலவு!
ஜனவரி 1, 2019 முதல் ஜூலை 11, 2021 வரை குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 42,529 ஐ எட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குவைத் நாட்டின் கருவூலத்தின் 2.1 மில்லியன் தினார்கள் என்றும், இது நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் பயண டிக்கெட்டுகளின் மதிப்பு என்று உள்ளூர் தினசரி அரபு நாளிதழ் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மொஹல்ஹல் அல்-முதாப்பின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்பட்ட இந்த வெளிநாட்டவர்களின் ஸ்பான்சர்கள் நாடுகடத்தலுக்கான செலவை ஏற்க வேண்டும் என்றும், அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை அவர்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுவார்கள் என்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.