இறந்த கணவனுடன் பேச ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண் பின்னர் மாறிப்போன வாழ்க்கை!

இறந்த தன் கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசும் ஒருவரை சந்தித்த பிரித்தானியப் பெண்ணின் வாழ்வே மாறிப்போனது.

இங்கிலாந்திலுள்ள Swindonஇல் வாழ்பவர் ஆஷா (Asha Rogers Webb, 43). ஆஷாவின் கணவர் ஜான், 2018ஆம் ஆண்டு திடீரென மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளும் இருந்துள்ளன.

தம்பதியரின் மகள் சாஃப்ரான் (Saffron, 22). தந்தையின் பிரிவைத் தாங்க இயலாத அவர், ஆவிகளுடன் பேசும் கெரின் (Kerin Webb, 60) என்பவரை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பு அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவே தன் தாய் ஆஷாவிடம் சென்று, கெரினை சந்திக்குமாறு கூறியிருக்கிறார்.

கெரினை சந்திக்கச் சென்ற ஆஷா, அவரை முதன்முறையாக சந்தித்ததும் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். எத்தனையோ ஜென்மங்களாக தங்களுக்குள் பந்தம் இருந்தது போல உணர்ந்தாராம் அவர், கெரினும் அதேபோல் உணர்ந்திருக்கிறார்.

பின்னர் ஆஷா, சாஃப்ரன் மற்றும் கெரின் மூவருமாக ஆவிகளுடன் பேசும் ஒருவரிடம் சென்றிருக்கிறார்கள். அந்த நபர், சமீபத்தில் இறந்த, நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சினை கொண்ட ஒருவரை தான் காண்பதாகவும், அவர் தன் குடும்பத்தினரிடம் தான் நன்றாக இருப்பதாகச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூற, அது தன் கணவர் ஜான்தான் என்று நம்பும் ஆஷா, அவர்தான் தன்னையும் கெரினையும் சந்திக்க வைத்ததாகவும், தாங்கள் இணைந்து வாழவேண்டும் என ஜான் விரும்புவதாகவும் நம்பியுள்ளார்.

இதற்கிடையில், ஒரு நாள் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கெரின் ஆஷாவிடம் கேட்க, அவரும் அதற்கு சம்மதிக்க, 2019ஆம் ஆண்டு கெரினும் ஆஷாவும் ஜானுடைய ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *