கட்டிப்பிடிக்க,முத்தமிட தடை!
சீனாவில் கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் கடுமையான சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். தீவிரமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால், ஷாங்காய் நகர மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே தங்களஒ தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தம்பதியர் தனித்தனியாக தூங்க வேண்டும் என்றும், முத்தம் தரக் கூடாது, கட்டிப் பிடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டிரோன்கள் மூலமாக கோவிட் குறித்த எச்சரிக்கைகளை சீனாவின் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடுமையான ஊரடங்குகளும் அமலில் உள்ளன.
ஆண்களை விட்டு விலகி இருக்கும் படி சுகாதாரத்துறை ஊழியர்கள் பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்