இலங்கையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு!
இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
“நான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்”
“அடுத்து வரும் நாட்களில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தமது டுவிட் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து, நாட்டில் அதிக முதலீட்டைக் கொண்டுள்ள சீனாவின் கருத்தும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது