துமிந்த சில்வா திருமண பந்தத்தில் இணைகிறார்!
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வா ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் பேச்சாளராக கடமையாற்றிய நிஷாரா ஜெயரட்னவையே அவர் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக நீதித்துறை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
குதிரைப்பந்தய வீராங்கனையான நிஷாரா ,சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக மேலும் தெரியவந்தது.