சவப்பெட்டி வாங்க பணமில்லாமல் அயலவர்களிடம் பணம் சேகரித்த யுவதி!

உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக யுவதியொருவர் ஊர் மக்களிடம் பணம் சேர்த்த சம்பவமொன்று கேகாலை-தேவாலேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தாய் இறந்ததை அறிந்தவுடன் அவரது சடலத்தைத் துணியொன்றினால் மூடிபலகை ஒன்றின் மீது வைத்துவிட்டு, சடலத்திற்கு அருகாமையில் விளக்கொன்றை ஏற்றி வைத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டுக் கதவை மூடிவிட்டு தாயின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்குவதற்காக பண உதவி கேட்டு வீடு வீடாகச் சென்றுள்ளார்.

திருமணம் ஆகாத குறித்த யுவதி திருமணமாகி தற்போது தூர இடங்களில் வசிக்கும் வசதியற்ற தனது சகோதரிகள் இருவருக்கும் தகவல் கொடுத்துவிட்டு 76 வயதான தனது தாயின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக இவ்வாறு உதவி கேட்டு வீடு வீடாகச் சென்று பணம் சேர்த்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற பணத்தில் குறைந்த விலையில் சவப்பெட்ட்டியை வாங்கி அயலவர்களின் உதவியோடு தாயின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.

திருமணமாகாக 26 வயதான இந்த யுவதி கூலி வேலை செய்து தனது தாயைக் காப்பாற்றி வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரது மரண விசாரணையின் போது இந்த சோக சம்பவம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *