இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 12 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் 14 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
520 பேர் குணமடைந்துள்ளனர். 420 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்