இலங்கையில் மருந்துப் பொருட்களின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.