‘அறையில் ரத்தக்கறை’ ஷேன் வோன் மரணத்தில் மர்மம்!
ஷேன் வார்ன் மரணம் அடைந்த அறையில் ரத்தக்கறை இருந்ததாக தாய்லாந்து போலீஸார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய முன்னாள் கிர்க்கெட் வீரர் ஷேன் வார்னே தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவரது மறைவு கிரிக்கெட் வீரர்கள், மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது மறைவு குறித்து தாய்லாந்து போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தாய்லாந்தில் மாரடைப்பால் உயிரிழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன்பு தங்கி இருந்த அறைவில் தரையிலும், தலையணையிலும் ரத்தக்கறை இருந்தது தொடர்பாக தாய்லாந்து போலீஸார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.