கொவிட் தொற்றால் 7 நாட்களின் பின்னர் மரணிப்போரது மரணம் கொவிட் மரணம் அல்ல!

நேற்று (05) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய கொவிட்-19 தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொவிட்-19 மரணமாக கருதப்படாது எனவும் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 மரணங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *