அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம்! – மிரட்டுகின்றது மஹிந்த அணி

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

“ஜனாதிபதியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து வெளியேற மறுத்தால், நாங்கள் மக்களின் ஆதரவுடன், அலரிமாளிகையில் இருந்து அவரை வெளியேற்றுவோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஏற்கனவே கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர் என்றும், ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் வெளியேறாவிடின், அவர்கள் அலரி மாளிகைக்குள் நுழைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *