ஐ.நா.செயலரை நாளை சந்திக்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸூக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு நாளை நிவ்யோர்க்கில் நடைபெறவுள்ளது.


ஐ.நா.பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நிவ்யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை உரையாற்றியிருந்தார். அன்றுமாலை அமெரிக்கா ஜனாதிபதியையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையிலேயே நாளைய தினம் ஐ.நா.பொதுச்செயலாளரையும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மேலும் அவகாலம் வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுப்பார் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *