ஞானசார தேரரின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிப்பு!

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.

இந்த ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், பதவிக் காலத்தை ஜனாதிபதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *