வேறொரு ஆணைத் திரும்பிப் பார்த்த காதலி மீது சிறுநீர் கழித்த காதலன் சிறையில்!

கனடாவில், மதுபான விடுதிக்குச் சென்றிருந்த கனேடியர் ஒருவர், நடனமாடும்போது தன் காதலி வேறொரு ஆணைத் திரும்பிப் பார்த்ததற்காக, அவர் மீது சிறுநீர் கழித்ததுடன் அவரது உதட்டையும் பயங்கரமாக கடித்துள்ளார்.

Prince Edward Island என்ற இடத்தைச் சேர்ந்த Caleb Hurry(44) என்ற நபர், தன் காதலியுடன் மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார்.

இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். ஏதோ போதைப்பொருளும் அருந்தியிருக்கிறார்கள். பிறகு இருவருமாக நடனமாடும்போது தனது காதலி வேறொரு ஆணைப் பார்ப்பதை Hurry கவனித்துள்ளார். இதனால் அவர் எரிச்சலடைந்திருக்கிறார்.

இருவரும் வீடு திரும்ப, வீட்டில் வந்ததும் கூடுதலாக குடித்துவிட்டு தன் காதலியிடம் அவர் வேறொரு ஆணைப் பார்த்ததற்காக சண்டையிட்டிருக்கிறார் அவர்.

மோசமான வர்த்தைகளால் காதலியை விமர்சித்ததுடன், அவரது கழுத்தையும் நெறித்திருக்கிறார் Hurry.

ஆனாலும் கோபம் அடங்காத நிலையில், வேண்டுமென்றே தன் காதலி மீது வாந்தியெடுத்த அவர், அந்தப் பெண் மீதும், அவரது மேசை, நாற்காலி மீதும் சிறுநீர் கழித்திருக்கிறார்.

இதற்குள் அந்தப் பெண் கீழே விழ, அவர் மீது ஏறி அமர்ந்த Hurry, அந்தப் பெண்ணின் உதட்டை பயங்கரமாக கடித்திருக்கிறார்.

அந்தப் பெண் அவசர உதவியை அழைக்க முயல, அவரது மொபைலையும் தட்டிவிட்டிருக்கிறார் அவர். அதற்குள் அக்கம்பக்கத்தவர்கள் வந்து Hurryயை வீட்டை விட்டு வெளியேறும்படி சத்தமிட, உள்ளாடைகளுடன் வெளியேறிய அவர் தெருவின் மறுபக்கம் உள்ள புதர்களுக்குள் பதுங்கியிருக்க, பொலிசார் வந்து அவரைக் கைது செய்துள்ளார்கள்.

இனி அவரது காதலியை சந்திக்கக்கூடாது என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண் மீண்டும் Hurryயை சந்திக்க, சந்திக்கக்கூடாது என்ற உத்தரவையும் மீறி அவர் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அங்கு இருவருமாக மீண்டும் இணைந்து வாழத் துவங்கியுள்ளார்கள்.

அந்தப் பெண் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், Hurry தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

18 மாதங்கள் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, அந்த காலகட்டம் முடிந்ததையடுத்து 9 மாதங்கள் சிறை செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *