இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இலங்கை அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, கொரோனா தொற்றக்கு உள்ளான வனிந்து ஹசரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவிஸ்க பெர்னாண்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.