பத்து இலட்சம் இலங்கையர்கள் ஆபத்தில்!
நாட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தரப்பினர்களில் சுமார் 10 இலட்சம் பேர் இதுவரை பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்கள் மற்றும் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தாலும், கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.