அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல்!
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்