அவுஸ்திரேலியாவில் இலங்கையர் இரு பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வசித்த 40 வயது இலங்கையரான இந்திக்க குணதிலக்க தனது நான்கு வயது மகள் லீலி மற்றும் ஆறு வயது மகன் ஹொகன் ஆகிய இரு பிள்ளைகளையும் கொலைசெய்துவிட்டு தனது வீட்டின் ஹராஜில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் குணதிலக தனது முகநூலில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து பரிந்துரைக்கப்பட்டதாகவும் உளவியலாளரை சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.