வைத்தியர் ஷாபிக்கு சம்பள நிலுவையுடன் மீண்டும் வேலை வாய்ப்பு!

குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.

மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டொக்டர் ஷாபி சியாப்தீன் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *