2025 ஆம் ஆண்டு முதல் மோட்டார் சைக்கிள்கள் ஒடத் தடை!
வியட்நாம் தலைநகர் ஹனாயில் 2025 ஆம் ஆண்டிலிருந்து மோட்டார் சைக்கிள்கள் ஓடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனாய்யில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதாலும், அப்பகுதியில் அதிகப்படியான வாகன நெரிசல்கள் மற்றும் காற்று மாசுப்படுவதைத் தவிர்க்கும் விதமாகவும் 2025-ஆம் ஆண்டு இத் தடையை அமுல் படுத்தவள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக சில முக்கிய வீதிகளில் இத் தடை அமுலுக்கு வரும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பகுதிகளிலும் இத் தடை அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.