ஐரோப்பாவில் கலவரமாக மாறும் கோவிட்-19 போரோட்டம்!
ஐரோப்பாவில் நெதர்லாந்து, ஆஸ்திரிய, கிரோஷியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டம் முழுவதும் கொரோனா வைரஸின் புதிய அலையின் காரணமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை, எதிர்த்து ஐரோப்பா முழுவதும் பல நாடுகளில் போராட்டங்கள் பொங்கி வருகின்றன.
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் இரவு 7 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு இந்த இந்த போராட்டமானது பெரும் கலவரமாக மாறிய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெதர்லாந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர்.
அதேபோல், ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் புதிய ஊரடங்கு மற்றும் அடுத்த ஆண்டு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், குரோஷியாவின் தலைநகரான ஜாக்ரெப்பின் மையத்தில், பொதுத்துறை ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசிகள் போடுவது குறித்த விதிமுறைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், சுவிட்சர்லாந்தில் வரும் நவம்பர் 28-ஆம் திகதி தடுப்பூசி பாஸ்போர்ட் மீதான தேசிய வாக்கெடுப்புக்கு நடைபெறவுள்ளதாய் முன்னிட்டு, சூரிச் மற்றும் லொசேன் வழியாக மக்கள் அணிவகுத்துச் சென்றனர்.
மேலும் இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும், கோவிட்19 கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.