கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு நாளை முதல் தடை!

ஒடிசாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல், க்ளப்புகள், பேரணிகள், இசைக்குழுக்கள் போன்றவற்றில் கொண்டாட ஒடிசா மாநிலத்தில் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான்,  அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 88 பேருக்கு உறுதி செய்யபப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *