அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்!
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட அழுத்தங்களினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி இல்லை என்று சொன்னால் அது நகைப்புக்குரிய விடயமாகும் என்றும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.