தவணைக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கையில் தவணைக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலத்தில் வாகன கடன் தவணைக் கட்டணம் மற்றும் சொத்துக் கொள்வனவு கடன் தவணைக் கட்டணம் என்பன செலுத்த தவறியோருக்காக சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தவணைக் கட்டணம் செலுத்த தவறியவர்களின் வானங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டாம் என நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான பொருளாதார திட்டம் பற்றி மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரல் கருத்து வெளியிட்ட போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.