சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

நாட்டு மக்கள் யாரும் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமடைய வேண்டாம் என வைத்திய துறையை சேர்ந்தவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாட்டில் பெரும்பாலான மக்கள் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர் இதன் காரணமாகவே உயிரிழப்புகளும், கொரோனாவால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக வைத்திய துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். .

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதும் தற்போது நிருபணமாகியுள்ளது. இதனால் மக்கள் யாரும் சினோபார்ம் தடுப்பூசி குறித்து அச்சமோ அல்லது அதனைப்பற்றிய வதந்திகளையோ நம்ப வேண்டாம் என மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *