இஸ்லாத்தில் ஏன் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது அதன் அறிவியல் என்ன?

அனேகர் பன்றி இறைச்சியை இஸ்லாம் மாத்திரம்தான் குர்ஆனின் ஊடாக தடுத்திருக்கிறது என்று எண்ணுகின்றனர் . அவ்வாறல்ல பைபிலும் தடுத்திருக்கிறது ஆனால் சில கிறிஸ்த்தவர்கள் தான் பைபிலை புறந்தள்ளி பன்றி மாமிசத்தை சாப்பிடுகின்றனர்.

குர்ஆனில் சுமார் 4 இடங்களில் பன்றி இறைச்சி தடுக்கப்பட்ட கருத்தை வலியுறுத்தி வசனங்கள் உள்ளன.

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறான்; 
(அல்குர்ஆன் : 2:173)

மேலும் குர்ஆனில் 5:3,6:145,16:115 போன்ற வசனங்களிலும் பன்றி இறைச்சி தடுக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு பைபிலில்

பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.
உபாகமம் 14:8

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
லேவியராகமம் 11:7

இவைகளின் மாமிசத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம், இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
லேவியராகமம் 11:8
 
இப்படியாக பைபிலில் மிக கட்டாயமாக தடுக்கப்பட்டது பன்றியின் மாமிசம்.

பைபில் மற்றும் இறுதிவேதமான குர்ஆனில் தடைசெய்யப்பட்ட பன்றி மாமிசத்தில் என்ன கேடு இருக்கிறது என்று அறிவியலை கொண்டு தெளிவுபடுத்தவே இப்பதிவு

பன்றி இறைச்சி உண்பதால் 70 விதமான சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்கிறது ஆய்வுகள்.   அதில் சில முக்கிய தகவலை தொகுத்திருக்கிறேன் .

மனித உடலினுல் சில புழு இனங்கள் பல நாட்களுக்கு வாழ்கின்றன.அதில் சிலவை உணவு சமிபாட்டுக்கு உதவுபவையும் உண்டு.

“டோனியா சோலியம் Taenia solium (pork tapeworm)  ” என்ற புழு, பன்றி இறைச்சியில் இருந்து மனித உடலில் உருவாகிறது. இது உணவுக்குழாயின் அடிப்பாகத்தில் தங்கி வாழும்.

“Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host.
Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long
periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that
migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs.
Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and
an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through
regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as
cysticercosis in muscle and other sites.”

அதாவது டேனியா சோலியம் , வைற்றை சூழவுள்ள பகுதிகளில் (ova) முட்டையிடுகிறது. இந்த முட்டைகள்தான் மிக ஆபத்தானவை. இவை மனித இரத்த நாளங்களில் பயணிப்பதால் உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றுவிடுகின்றன. இந்த முட்டை பரவும் எல்லா இடங்களிலும் நிச்சயம் பாதிப்பை உருவாக்கும்.  அதிலும் இதயம், மூளை, கண், நுரையீரல் என்பன முக்கியமானவை.

பன்றி இறைச்சியில் டோனியா சோலியம் என்ற புழு மாத்ரமல்ல ” ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ் ( Trichura Tichurasis)” என்ற புழுவும் மனித உடலில் பரவும். இரு புழுக்களும் ஒரே மாதிரியான குணமுடையவை.

இப் புழுக்களின் முட்டைகள் பன்றி இறைச்சியை நன்கு வேகவைப்பதால் இறந்து விடுகின்றன என்ற கருத்தும் தவறான ஒன்றாகும். ஏன் எனில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , ட்ரிசுராஸிஸ் முட்டைகளால் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை சமைத்து உண்டவர்கள்தான். 

இவ் புழுக்களில் முட்டைகள் சாதாரண நீரின் கொதி நிலையில் இறப்பதில்லை .

மேலும் பன்றி மாமிசத்தில் உள்ள மித மிஞ்சிய கொழுப்பு,ஹார்ட் அடக்,ஹைபர் டென்ஷன் ” பேன்ற நோய்களை இலகுவாக உருவாக்கிவிடும்.

பன்றியை சாப்பிடும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களில் பாதி போர் ஹைபர்டென்சன் நோயால் பாதிப்படைந்தவர்களே.

நோய்களை ஏற்படுத்துவது மற்றுமன்றி அது சுகாதாரமற்ற ஒரு விலங்கும் கூட. பண்டைய காலங்களிலும் நாகரீக வளர்ச்சியற்ற காலங்கள் மற்றும் இடங்களில் பன்றிகளை மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பயன்படுத்தினர்.
இன்று நாகரிக வளர்ச்சியடைந்துவிட்டதால் மனித கழிவு அகற்ற பன்றிகளை பயன்படுத்துவதில்லை என்பது உண்மையானாலும், இவ் நாடுகளில் இவை ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால் அதன் கழிவுகளையே அது உண்டு வாழ்கிறது .

எப்படி பார்த்தாலும் பன்றி ஒரு சுகாதாரமற்ற விலங்கு என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *