நண்பனின் மொபைல் போனில் மகளின் ஆபாச படத்தை கண்ட தந்தை பின்னர் நடந்த விபரீதம்!

ரஷ்யாவில் தனது 8 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த நண்பனை, சிறுமியின் தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Samara நகரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் திகதி Oleg Sviridov எனும் 32 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சடலத்தை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தியபோது, இறந்தவரும் அவருடைய நண்பர் Vyacheslav M (34) என்பவரும் மாலை வேலையை முடித்துவிட்டு அப்பகுதிக்கு மது அருந்த சென்றது தெரியவந்தது.

பொலிஸார் Vyacheslav-வை தேடிவந்த நிலையில், அவரே காவல் நிலையத்துக்கு சென்று தனது நண்பனை கொலை செய்ததாக சரணடைந்தார்.

அவர் கொலை செய்ததற்கான காரணத்தை கூறியபோது பல திடுக்கிரும் தகவல்கள் வெளியாகின. விசாரணைக்கு பிறகு பொலிஸார் கூறியதாவது:

Sviridov மற்றும் Vyacheslav ஆகிய இருவரும் கட்டுப்பகுதியில் குடித்து விட்டு தூங்கியுள்ளனர். அப்போது Vyacheslav போதை தெளிந்து முழித்த நிலையில், Sviridov-வின் செல்போனை எடுத்து அதிலிருந்த படங்களை வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு விடியோவை திறந்து பார்த்தபோது, அதில் தனது 8 வயது மகள் இருப்பதை பார்த்து அதிர்ந்துபோனார். மேற்கொண்டு அந்த வீடியோவை பார்க்க, அதில் Sviridov, தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதைப் பார்த்துள்ளார்.

தனது மகள் எப்படியோ அங்கிருந்து தப்பி ஓடியது அந்த வீடியோவில் தெரிந்தது. அனால் அடுத்தடுத்த வீடியோவில் பல சிறுமிகளை இதே போல் சீரழித்து அதனை வீடியோ எடுத்துள்ளதை Vyacheslav பார்த்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், தனது நம்பனை தாக்க தொங்கியுள்ளார். அப்போது, வாக்குவாதமும் சண்டையும் முற்றியபோது, தான் வைத்திருந்த கத்தியில் அவரே வந்து விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பொலிஸார் Vyacheslav மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், Sviridov-ன் செல்போனில் இருக்கும் விடீயோக்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், Vyacheslav ஒரு ஹீரோ என்றும், அவர் தனது மகளுக்கும், அவரை சுற்றி உள்ளவர்களுக்கு நல்லதைத் தான் செய்துள்ளார், அவர் செய்தது கொலை அல்ல, அவரை விடுவிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *