குடும்ப வறுமையை போக்க ஆட்டோ ஓட்டும் 8 வயது சிறுவன்!
ஆந்திராவில் தனது குடும்ப வறுமையைப் போக்க ஏழு வயது சிறுவன் ஆட்டோ ஓட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் சித்தூர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கோபால் ரெட்டி என்பவர் தனது பார்வை இழந்த பெற்றோர்கள் மற்றும் 2 சகோதரர்களுக்காக பேட்டரி ஆட்டோவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்து வருகிறார்.
அந்த சிறுவன் ஆட்டோ ஓட்டுவது தொடர்பான விடியோ சமுக வலைத்தளங்களில் பரவியதைத் தொடங்கி, போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.18 வயது பூர்த்தியடையாத நேரத்தில் இந்த சிறுவனுக்கு எப்படி உரிமம் கிடைத்தது என்கின்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.