இலங்கையில் கர்ப்பிணி பெண்கள் 4200 பேருக்கு கொரோனா 32 பெண்கள் உயிரிழப்பு!
நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 32 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், கர்ப்பிணி பெண்களுள் 75 வீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் மேற்படி பணியகம் தெரிவித்துள்ளது.