இலங்கை பெளத்த பிக்குகளின் சாதனை!
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையில் பௌத்த பிக்குகள் இணைந்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தி வருகின்றனர்.
உலகில் மிக நீண்டகாலமாக பிரித் பிரார்த்தனை நூல் பயன்படுத்தப்படுவதே உலக சாதனையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் இன்றுவரை இதுஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் குருநாகல் – மாவத்தகம மீதென்வல பிரதேசத்திலுள்ள போதிமலு விகாரை பிக்குகுள் இணைந்து, அருகிலுள்ள ஏனையகிராமங்களையும் இணைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பிரார்த்தனை நூலினை ஏற்பாடு செய்தனர்.
இது பெரும்பாலும் இது உலக சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக குறித்த விகாரையின் பிக்குகள் கூறுகின்றனர்