இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
115 ஆண்களும்101 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 41 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் ஐவரும் மரணித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8,991 பேர் உயிரிழந்துள்ளனர்.