கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சிறந்த அறிகுறியல்ல!

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருப்பது சிறந்த அறிகுறியல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் குறுகிய காலத்துக்குள் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. இது சிறந்த அறிகுறியல்ல. ஆபத்தான நிலைமையை இது எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்தும் பேணாவிடின் மீண்டும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *