வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி பயணத்தடை மேலும் 14 நாட்கள் நீடிப்பு!

இன்று வெளியான புதிய சுகாதார வழிமுறை கொரோனா தடுப்பு சட்டதிட்டங்கள்.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ,மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வழிபாட்டு தலங்களை திறக்க
அனுமதிக்கப்பட்டுள்ளது.

150 பேருடன் 25 வீதமானோர் அமரக்கூடிய இடமொன்றில் திருமண நிகழ்வுகளை நடத்தலாம். செயலமர்வு ,மாநாடுகள் , கருத்தரங்குகள்
விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகள் 50 பேருடன்
வரையறுக்கப்பட்டு நடத்தலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *