தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்!
தனியார் துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில், உரிய சட்டத்தின் 3வது சரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி , 10,000 ரூபாவாக இதுவரை காணப்பட்ட ஆகக்குறைந்த சம்பளத்தை, 12,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவிலிருந்து 500 ரூபா வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ,தொழில் அமைச்சில் நேற்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.