நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 100% பார்வையாளர்களுடன் கிரிக்கெட் போட்டி!
லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உலகின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூலை 10ம் திகதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் 31,500 பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பார்வையாளர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தன. இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை அடுத்து இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது