டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவு!

டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் மரணம் மத்திய பிரதேசம் உஜ்ஜெயினியில் பதிவாகி உள்ளது.

இதன்படி ,அந்த மாநிலத்தில் 5 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. 3 பேர் போபாலை சேர்ந்தவர்கள் என்றும் எஞ்சிய 2 பேர் உஜ்ஜெயினியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ,இந்த நிலையில், டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டிருந்த உஜ்ஜெயினி பெண்மணி சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்தாகவும்,அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா பிளஸ் வைரசின் மரபுக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *