ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் கதை பொய்த்துப் போனது!

தென்னாபிரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரபூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *