தங்க மாஸ்க் அணிந்து வரும் கோல்டன் பாபா!
உத்தரபிரதேசத்தில் மனோஜ் ஆனந்த் என்ற நபர் தங்க மாஸ்கை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருகிறார்.
உலக நாடுகளை கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கை கழுவுவது, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்றவற்றை மக்கள் பின்பற்றுவது அவசியம்.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒருவர் தங்க மாஸ்க் அணிந்து உலா வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற நபர் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்கை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருகிறார். பொதுமக்கள் இவரை கோல்டன் பாபா என அழைக்கின்றனர்.