வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!
வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைக் காலமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,கொரோனா (COVID-19) வைரஸ் தாக்கத்தின் காரணமாக, வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வோருக்கு 2021 ஓகஸ்ட் மாதம் 31 வரை எவ்வித அபராதக் கட்டணங்களும் அறவிடப்படாது என வடமேல் மாகாண செயலாளர் பீ.பீ.எம்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் ,இணையவழி ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் வாகன வருமான தற்காலிக அனுமதிப்பத்திரங்களுக்கான கால எல்லை 60 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.