குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட வீரன்!
ரஷ்யாவில் தீவிபத்து நேர்ந்த மூன்றடுக்குக் கட்டடத்தில் குழாய் வழியாகத் துணிச்சலுடன் ஏறிய உள்ளூரை சேர்ந்த மூவர் சன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர்.
இதன்படி ,தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில் சன்னல் வழியே அபயக் குரலைக் கேட்ட துணிச்சல் மிக்க மூவர் குழாய் வழியே ஒருவர் பின் ஒருவராக ஏறி நின்றுகொண்டனர்.
மேலும் ,சன்னல் வழியே ஒவ்வொரு குழந்தையாக வாங்கிக் கீழே நின்ற அடுத்தவரிடம் கொடுக்க அவர் மற்றொருவரிடம் கொடுக்கத் தரையில் நின்றவர்கள் அவர்களை வாங்கிக் கொண்டனர். இவ்வாறு பாதுகாப்பாகக் குழந்தைகள் இருவரையும் மீட்டுள்ளார்.