கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி வீடு திரும்பியதால் பரபரப்பு!

கொரோனா காரணமாக மூதாட்டி உயிரிழந்ததாக் கூறி உடலை புதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வீட்டிற்கு உயிருடன் வந்ததால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாபேட்டை நகரை சேர்ந்தவர் கிரிஜம்மா. 70 வயது மூதாட்டியான கிரிஜம்மா கொரோனா தொற்று காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

 இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய கணவருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து கொரோனா விதிகளை பின்பற்றி கிரிஜம்மா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவர் கிறிஸ்தவர் என்பதால் கிரிஜம்மா மரணத்தை முன்னிட்டு அவருடைய வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது. அப்போது திடீரென்று கிரிஜம்மா வீட்டுக்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

 கிரிஜம்மா உயிருடன் வீடு திரும்பியதால் அவருடைய கணவர், உறவினர்கள் ஆகியோர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை அடைந்தனர். இந்த நிலையில் கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்டது யாருடைய உடல் என்று புரியாத நிலை தற்போது நிலவுகிறது.அதேவேளையில்,அதிகாரிகள் கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்டது யாருடைய உடல் என்ற குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *