தாஜ்மஹால் மூடப்படுகிறது!
இந்தியா முழுக்க கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிற நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வட இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலும் கொரோனா பின்விளைவுக்குத் தப்பவில்லை.
சுற்றுலாப் பயணிகள் கூடும் இடமான தாஜ்மஹாலை ஒரு மாதம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மே-15 ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.